வன உயிரின வாரம் (October 2 to October 8)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் (October 2 to October 8) வனஉயிரின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனங்களையும்,வன உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்த வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்கு பாதுகாப்பு அவசியம். மரங்கள் மற்றும் தாவரங்களின் பெருக்கத்திற்கும் தட்ப வெப்ப நிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். 

வன தியாகிகள் தினம் (Forest Martyrs Day) செப்டம்பர் 11

நாட்டின் வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பின்போது உயிர் தியாகம் செய்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 ஆம் தேதி தேசிய வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது

தமிழ்நாடு வனத்துறை தேசிய வனத்துறையுடன் இணைந்து செயல்படுவதன் பலனாக தமிழகத்தில் 2500 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட வன ஊழியர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களது குடும்பங்களுமே காரணம் ஆகும்.