இணையவழி பணியிடமாறுதலில் அநீதி இழைக்கப்படுகிறதா?
வனத்துறையில் பணியிடமாறுதல் என்பது 2022 ஆம் ஆண்டுவரை பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பம் மூலம் நேரடியாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து பணியிடமாறுதல் பெறப்பட்டது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் முறைகேடு நடப்பதாகவும் கருதி 2022 ஆம் ஆண்டு இணையவழி பணியிடமாறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
2023 ஆம் ஆண்டு இணையவழியில் பணியிடமாறுதல் கோரி விண்ணப்பித்தபோது பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. அதற்கான காரணம்
1 பணியாளர்களின் விபரம் முழுவதுமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
2 பதிவேற்றம் செய்யப்பட்ட பலரின் பதிவுகள் முரணாக இருந்தது. பதவி உயர்வு பெற்றவர்களின் விபரம் மற்றும் பணிபுரியும் இடம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
3 காலிப்பணியிடங்கள் விபரம் சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.